தொழிலாளியை கொன்ற நண்பர் கைது :

தொழிலாளியை கொன்ற நண்பர் கைது :
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே நத்தம் அண்ணா நகரைச் சேர்ந்த குமராண்டி மகன் முருகன் (40). இதே ஊரைச் சேர்ந்த முத்து மகன் குமரன் (37). நண்பர்களான இருவரும் சேர்ந்து சமையல் வேலை செய்து வந்தனர். கடந்த 9-ம் தேதி சமையல் வேலைக்குச் சென்றுவிட்டு வந்தபோது தனக்கு குறைவாக சம்பளம் கொடுத்ததாக குமரன், முருகனிடம் தகராறு செய்துள்ளார்.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை அபிராமத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த முருகன் மீது குமரன் கல் வீசி தாக்கியுள்ளார். படுகாயமடைந்த முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார். அபிராமம் போலீஸார் வழக்குப் பதிந்து, குமரனை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in