Published : 13 Sep 2021 03:15 AM
Last Updated : 13 Sep 2021 03:15 AM

மதுரையை சேர்ந்த தாய், மகன் தற்கொலை :

ராமநாதபுரம்: மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா வையூரைச் சேர்ந்த சின்ன முனியாண்டி மனைவி மாரியம்மாள் (60). இவரது மகன் பாக்கியராஜ் (35). கணவர் இறந்து விட்ட நிலையில் மாரியம்மாள் மற்றும் இரண்டு மகன்கள், மருமகள்கள், குழந்தைகள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்த நிலையில் மாரியம்மாள், பாக்கியராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் தொண்டிக்கு வந்தனர். பின்னர் நேற்று காலை தொண்டி முறிச்சிலான் தோப்புப் பகுதியில் விஷம் குடித்தனர்.

இதில் மாரியம்மாள் உயிரிழந்தார். பாக்கியராஜ் ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று மாரியம்மாளின் உடலை மீட்டனர். பாக்கியராஜை தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் உயிரிழந்தார். தொண்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x