விருதுநகர் மாவட்டத்தில் இன்று - 1,067 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் : ஒரு லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு

விருதுநகர் மாவட்டத்தில் இன்று -  1,067 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் :  ஒரு லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் 1,067 மையங்களில் இன்று நடைபெறும் மெகா கரோனா தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் இன்று (12-ம் தேதி ) காலை 7 மணி முதல் மாலை 7 வரை 1,067 தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரு லட்சம் நபர்களை இலக்காக கொண்டு மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

மாவட்டத்தில் மொத்தம் 18 வயதுக்கு மேற்பட்ட 15,36,000 நபர்கள் உள்ளனர். இதில் 7,99,346 பேருக்கு முதல் தவணையும், 2,23,650 பேருக்கு 2-ம் தவணையும் என மொத்தம் 10,22,996 நபர்களுக்கு இதுவரை (10-ம் தேதி வரை) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கையில் 52 சதவிகிதம் ஆகும்.

எனவே, விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 100 சதவிகிதத்தை எட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம் மூலம் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் இன்று நடத்தப்படுகிறது. அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என 1,067 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in