Published : 12 Sep 2021 03:21 AM
Last Updated : 12 Sep 2021 03:21 AM

தீக்குளித்த மாட்டு வண்டி தொழிலாளி உயிரிழப்பு :

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்கக்கோரி தீக் குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

தா.பழூரை அடுத்த உதய நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(40). மாட்டு வண்டித் தொழிலாளியான இவர், கடந்த 1-ம் தேதி மாட்டு வண்டி மணல் குவாரியை அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாய மடைந்த பாஸ்கர், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தா.பழூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். பாஸ்கருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x