100 நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி மறியல் :

100 நாள் வேலையை முறையாக வழங்கக்கோரி மறியல்  :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் தம்பி ரான்பட்டி ஊராட்சியில் கடந்த சில தினங்களாக கிராம மக்க ளுக்கு நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் சரிவர பணிகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பு மக்கள் ஊராட்சி நிர்வாகத்தின் பாரபட்சமான செயலைக் கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தம்பிரான்பட்டி பேருந்து நிறுத் தத்தில் செட்டிக்குளம்- பெரம் பலூர் சாலையில் நேற்று நடைபெற்ற மறியலில் நூற்றுக் கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in