அரியலூரில் ஆர்ப்பாட்டம், மறியல் இந்து அமைப்பினர் 45 பேர் கைது :

அரியலூரில் ஆர்ப்பாட்டம், மறியல் இந்து அமைப்பினர் 45 பேர் கைது :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி தங்களது வீடுகளின் முன் விநாயகர் சிலைகளை வைத்திருந்த இந்து முன்னணி அமைப்பினர் சிலரை போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து, ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பைச் சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது, இந்து முன்னணி அமைப்பினரை போலீஸார் ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக கூறி, பாஜக, ஆர்எஸ்எஸ், வி.எச்.பி அமைப்பினர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.

தொடர்ந்து, இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் மகாலிங்கம் உட்பட 45 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in