Published : 10 Sep 2021 05:59 AM
Last Updated : 10 Sep 2021 05:59 AM

திருச்சியில் தமுமுக ஆர்ப்பாட்டம் :

டெல்லியில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எம்.ஏ.முகம்மது ராஜா தலைமை வகித்தார்.

தமுமுக மாநிலப் பொருளாளர் என்.ஷபியுல்லாகான், மமக மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.யாக்கூப், தமுமுக மகளிரணி மாநிலப் பொருளாளர் ஷான்ராணி ஆலிமா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, திராவிடர் கழக மகளிர் பேரவைத் தலைவர் அம்பிகா கணேசன் ஆகியோர் பேசினர்.

தமுமுக மாவட்டச் செயலாளர் ஏ.இப்ராஹிம், மாவட்டப் பொருளாளர் ஏ.அஸ்ரப் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.பைஸ் அகமது உட்பட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x