2 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது :

2 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது :

Published on

திருச்சி கோட்டை ஜீவா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் கோட்டை போலீஸார் நேற்று முன்தினம் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்த சப்பாமணி மகன் ராஜ்குமார் (எ) வீரப்பனை (23) கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in