கீழ்பென்னாத்தூர் அருகே : மாமனார் வீட்டில் திருடிய மருமகன் கைது :

கீழ்பென்னாத்தூர் அருகே  : மாமனார் வீட்டில் திருடிய மருமகன் கைது :
Updated on
1 min read

கீழ்பென்னாத்தூர் அருகே மாமனார் வீட்டில் திருடிய மருமகன் கைது செய்யப்பட்டர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூர் வட்டம் சிறு நாத்தூர் கிராமத்தில் வசிப்பவர் ராமன்(44). இவரது வீட்டில் கடந்த மாதம் 3 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவை திருடு போனது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ராமனின் வீட்டில் திருடியது, சென்னை திருவேற்காடு கேபிஎஸ் நகரில் வசிக்கும் ராமனின் மருமகன் விஜயகுமார் (24) என்பது உறுதியானது.

இதையடுத்து அவரை நேற்று முன்தினம் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 பவுன் நகை, ரூ.2 லட்சம் மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in