விவசாயிகளுக்கு நோய் மேலாண்மை பயிற்சி  :

விவசாயிகளுக்கு நோய் மேலாண்மை பயிற்சி :

Published on

முஷ்ணம் அருகே உள்ள ராமாபுரம் ஊராட்சியில் வேளாண்துறை சார்பில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த பயிற்சிநடைபெற்றது. பயிற்சிக்கு காட்டுமன்னார் கோவில் வேளாண் உதவி இயக்குநர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பல்வேறு பூச்சிகள், நோய்கள் குறித்தும் இயற்கை முறையில் உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் தயாரித்தல் குறித்தும் அவர் விளக்கினார். பசுதாள் உரங்கள், பசுந்தழை உரங்கள், பஞ்ச கவ்வியம்உள்ளிட்ட இயற்கை உரங்களை பயன்படுத்துவது பற்றியும், அதன் நன்மை மற்றும் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் விளக்கி பேசினார். பயிற்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் கலைவாணன் ஆகியோர் செய்திருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in