நகை பறித்த 2 பேர் கைது :

நகை பறித்த  2 பேர் கைது  :
Updated on
1 min read

சங்கரன்கோவிலைச் சேர்ந்த குருசாமி என்பவரது மனைவி சுசீலா. இவர், நடந்து சென்ற போதுஇருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சுசீலா அணிந்திருந்த 5 பவுன்நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். சங்கரன்கோவில் டவுன் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த2 பேரை பிடித்து விசாரணைநடத்தினர். விசாரணையில் அவர்கள், சாம்பவர்வடகரையைச் சேர்ந்த மது (24), காஜாமைதீன் (23) என்பதும், சுசீலாவிடம் நகைபறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீஸார் கைது செய்து, 5 பவுன் நகையை மீட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in