Published : 06 Sep 2021 03:16 AM
Last Updated : 06 Sep 2021 03:16 AM

வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை :

திண்டுக்கல்: வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் திருச்சி சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிலை அமைப்புக் குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைவர் சந்திரசேகரன், செயலாளர் தனபாலன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் எம்.எல்.ஏ., க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன், எம்.பி., ப.வேலுச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் மேயர் மருதராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பாரதிய ஜனதா சார்பில் கிழக்கு மாவட்டத் தலைவர் தனபாலன் தலைமையில் அக்கட்சியினரும், காங்கிரஸ் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் தலைமையில் அக்கட்சியினரும் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மண்டலச் செயலாளர் சிவசங்கரன், வேளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஜோதிமுருகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x