ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி :

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி :
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. தற்போது 11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சித்தோடு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் என 211 இடங்களில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

இதுபோல் ஈரோடு மாநகராட்சியில் 27 இடங்கள் என மாவட்டம் முழுவதும் 238 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 45 ஆயிரத்து 500 பேருக்கு டோக்கன் அடிப்படையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.

முகாம்களில் கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுவரை தடுப்பூசி போடாமல் இருக்கும் மக்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in