Published : 05 Sep 2021 03:17 AM
Last Updated : 05 Sep 2021 03:17 AM

காட்டுப் பன்றி வேட்டையாடிய 7 பேருக்கு அபராதம் :

தென்காசி

புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி பீட் பகுதி யில் வனச்சரகர் ஸ்டாலின் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வேட்டை நாய்களை பயன்படுத்தி காட்டுப் பன்றி வேட்டையாடிய 7 பேர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள், புளியங்குடி பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (28), ஜெகதீஷ்வரன் (22), பிரபாகரன் (21), அர்ஜுனன் (25), காமேஷ் (27), ஆகாஷ் (21), ரமேஷ் (21) என்பது தெரியவந்தது. இவர்கள் 7 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x