Published : 05 Sep 2021 03:17 AM
Last Updated : 05 Sep 2021 03:17 AM

தி.மலை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில் - சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல் :

சுகாதார துறை துணை இயக்குநர்களிடம் 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்.

திருவண்ணாமலை

செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளை தி.மலை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்களிடம் ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று முன்தினம் ஒப்படைத்தார்.

செஞ்சிலுவை சங்கம் சார்பில்தி.மலை சுகாதார மாவட்டத்தில் உள்ள 12 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா 2 வீதம் மொத்தம் 24 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் மற்றும் செய்யாறு சுகாதார மாவட்டத்தில் உள்ள 8 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா 2 வீதம் 16 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரகள் என மொத்தம் 40 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் ஆட்சியர் பா.முருகேஷிடம்வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.40 லட்சமாகும்.

இதையடுத்து அவர், சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் மருத்துவர் செல்வகுமார் (தி.மலை), மருத்துவர் பிரியாராஜ் (செய்யாறு) ஆகியோரிடம் 40 ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஒப்படைத்தார். தி.மலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் இந்திரராஜன், துணைத் தலைவர் மண்ணுலிங்கம், பொருளாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x