அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம் :

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் தலைமை வகித்து, அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிப்பு, வாழ்த்து அட்டை மற்றும் ரோஜாப் பூக்களை வழங்கினார். மதியம் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. மாலையில் ஆசிரியர்களுக்கு விதை என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் சேரலாதன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தர்மன், பொருளாளர் கனல் சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் அசோக்பாபு, கராமத் உள்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in