Published : 04 Sep 2021 03:16 AM
Last Updated : 04 Sep 2021 03:16 AM

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் - 35 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது :

திருச்சி/புதுக்கோட்டை/தஞ்சாவூர்

2020- 2021-ம் ஆண்டுக்கு மாநில நல்லாசிரியர் விருது (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது) பெறும் திருச்சி மாவட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள் ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சி யர் சு.சிவராசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றி யத் தொடக்கப் பள்ளி தலைமை யாசிரியர் ந.கீதா, கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் இரா.அசோக்குமார், எடமலைப்பட்டிப் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் பி.ஜோ.கி.ஜெயராணி, பாம்பாட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை யாசிரியர் இரா.மார்செலின் ரெஜினாமேரி, இ.வெள்ளனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.பாலசுப்பிரமணியன், சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) கோ.முத்த மிழ்செல்வன், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் க.அன்பு சேகரன், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) ப.சிவராஜ், மணப்பாறை தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் கி.முத்துக்குமார், திருநெடுங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எ.நித்யானந்தன், மேல கல்கண் டார்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை யாசிரியர் எஸ்.பீபி அப்துல், கைலாசபுரம் பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியர் பொ.கணேஷ், வேங்கூர் செல்லம் மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சு.பகவதியப்பன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்....

இதபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். அதன்படி, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், கே.வி.கோட்டை அரசு உயர் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் நா.செல்வக்குமார், லெக்கணாப் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனி, மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் தா.ராமர், காயாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரா.செந்தில்குமார், மீனம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சி.ஷோபா, கவரப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் மு.மீனா, ஆவணத்தான்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ப.கலைச்செல்வி, செட்டிக்காடு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.லீமாரோஸ்லிண்ட், மேலூர் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அ.கிறிஸ்டி மற்றும் கற்பக விநாயகா மெட்ரிக் பள்ளி முதல்வர் இ.ஷானுரிஜ்வான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

தஞ்சாவூர் மாவட்டத்தில் கண்ணந்தங்குடி மேலையூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாதவன், தஞ்சாவூர் தூய அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் இ.குழந்தைசாமி, கும்பகோணம் பாணாதுறை மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ரா.நாகேஸ்வரன், கோவிலடி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நா.திரு நாவுக்கரசு, தஞ்சாவூர் மேம்பாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் க.தமிழ்செல்வன், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஆர்.காஜா மொகைதீன், பேராவூரணி பெரிய தெற்குகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெ.ராமநாதன், தஞ்சாவூர் பூக்காரத் தெரு கணேச வித்யா லயா பள்ளி இடைநிலை ஆசிரியர் புகழேந்தி, வேப்பத்தூர் உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் வி.சிவசங்கர், கண்டியூர் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி தலைமை யாசிரியை எழிலரசி, திருக்காட் டுப்பள்ளி லூர்து சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆர்.தமிழ்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் சிவக்குமார் தெரிவித்தார்.

இவர்களுக்கான விருது தஞ்சா வூர் ஆட்சியர் அலுவலகத்தில் விரைவில் வழங்கப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x