Published : 03 Sep 2021 03:16 AM
Last Updated : 03 Sep 2021 03:16 AM

தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி :

நாமக்கல் அருகே எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேரணியை தொடங்கி வைத்தார்.

ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. பேரணியில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், ரத்த சோகையினால் ஏற்படும் பாதிப்புகள், போஷான் அபியான் திட்டத்தின் நோக்கம் ஆகியவை குறித்த பேனர்கள் ஏந்திச் செல்லப்பட்டன.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட மாவட்ட திட்ட அலுவலர் வி.ஜான்சி ராணி, எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அருளாளன், குணாளன், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ரா.லதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x