திருவேங்கடத்தில் 2 பேர் உயிரிழப்பு :

திருவேங்கடத்தில் 2 பேர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த கந்தசாமிஎன்பவரது மகன் கார்த்திகேயன் (24). சொந்தலாரி மூலம் செங்கல் வியாபாரம் செய்து வந்தார். அடைக்கலாபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் காளிராஜ் (21). லாரி ஓட்டுநர். உறவினர்களான இவர்கள் இருவரும் சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

பின்னர், இருசக்கர வாகனத்தில் இவர்கள்இருவரும் ஊருக்கு திரும்பினர். சத்திரங்கொண்டான் விலக்கு அருகே எதிரே வந்த வேன் மோதியதில் பலத்தகாயம் அடைந்த இருவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் உயிரிழந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் காளிராஜ் உயிரிழந்தார். திருவேங்கடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in