Published : 30 Aug 2021 03:14 AM
Last Updated : 30 Aug 2021 03:14 AM

அரகண்டநல்லூர் அருகே - ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு :

விழுப்புரம்

அரகண்டநல்லூர் அருகே ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

அரகண்டநல்லூர் அருகே வீரமடை கிராமத்தில் உள்ளஅய்யனார் கோயிலில் பொங் கல் வைத்து வழிபடுவதற்காக கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் நேற்று வந்தனர். அந்த குடும்பத்தினர் பொங்கல் வைத்துள்ளனர். அப்போது, சேதுராமன் மகன் அபினாஷ் (17) மற்றும் செந்தில் மகன் ஆகாஷ் (17) ஆகியோர் கோயிலுக்கு அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச்சென்றனர். இருவரும் வெகுநேரமாகியும் திரும்பவில்லை. அவர்களை உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினர் பொதுமக்கள் உதவியோடு ஆற்றில் இறங்கி தேடியுள்ளனர்.

அப்போது, மயங்கிய நிலையில் ஆற்று நீருக்கு அடியில் இருந்த இருவரையும் மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவர்கள் இரு வரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x