செந்துறையை பேரூராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை :

செந்துறையை பேரூராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என ஒன்றிய திமுக செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.

செந்துறை ஒன்றிய திமுக அலுவலகத்தில் ஒன்றிய செயற் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் செல்வ ராஜ் தலைமை வகித்தார். கட்சி பொறுப்பாளர்கள் இளங்கோ வன், ராஜேந்திரன், பாஸ்கர், விக்னேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், செந்துறையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச் சாலை, செந்துறை பகுதியில் முந்திரி தொழிற்சாலை, பாலி டெக்னிக் கல்லூரி அமைக் கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், செந்துறை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தி ஆணை பிறப்பிக்க வேண்டும் என முதல்வர் மற்றும் அமைச்சரை கேட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in