போலீஸாருக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி :

போலீஸாருக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி  :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் அமைந்துள்ள காவல்துறை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் போலீஸாருக்கான வருடாந்திர துப்பாக்கிச் சுடும் பயிற்சி நேற்று நடைபெற்றது. இதில் காவலர் முதல் எஸ்.பி வரை 3 விதமான பிரிவுகளில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப் பட்டது.

பெரம்பலூர் மாவட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி பாண்டியன் தலைமையில், ஆயுதப்படை டிஎஸ்பி சுப்புராமன் அடங்கிய குழுவினர் போலீஸாருக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்தனர். நாளை (ஆக.31) வரை இப்பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறுவதை முன்னிட்டு, நாரணமங்கலத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in