போலீஸாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி :

கடலூர் கேப்பர் குவாரி மலை ராமாபுரம் பயிற்சி தளத்தில் போலீஸார் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டனர்.
கடலூர் கேப்பர் குவாரி மலை ராமாபுரம் பயிற்சி தளத்தில் போலீஸார் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டனர்.
Updated on
1 min read

கடலூர் கேப்பர் குவாரி மலை ராமாபுரம் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் எஸ்பி சக்திகணேசன் உத்தரவின் படி ஆயுதப்படை டிஎஸ்பி சௌந்தர்ராஜன் மேற்பார்வையில் கடந்த 23-ம் தேதியில் இருந்து காவல்துறையினருக்கான வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்தில் உள்ள போலீஸாருக்கு 303 ரைபில், 7.62எஸ்எல்ஆர், 5.56 இன்சாஸ் வகைதுப்பாக்கிகளும், ஆயுதப்படை காவல் போலீஸாருக்கு 5.56 இன்சாஸ், ஏ.கே 47 வகைதுப்பாக் கிகளும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இப்பயிற்சி வரும் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in