விமானநிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் :

விமானநிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் :
Updated on
1 min read

துபாயிலிருந்து நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு போலீஸார் அங்கு சென்று, விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விழுப்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(34), ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத் (32) ஆகியோர் உடலுக்குள் மறைத்து 2.075 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினர் ஆறுமுகம், ஷேக் தாவூத் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in