Published : 26 Aug 2021 03:14 AM
Last Updated : 26 Aug 2021 03:14 AM

டிரான்ஸ்பார்மர் பழுதால் சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்ட விநியோகம் பாதிப்பு :

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், வைகை அணை - சேடப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் ஆண்டிபட்டி பேரூராட்சி, மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, பேரையூர், கல்லுப்பட்டி, சேடப்பட்டி, எழுமலை உள்ளிட்ட 536 கிராமங்களுக்கு தினமும் 2 கோடியே 10 லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான சுத்திகரிப்பு நிலையம் வைகை அணை அருகே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்குள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் நேற்று பழுதடைந்தது. இதனால் சுத்திகரிப்பிலும், விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. எனவே வரும் 4 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்தும்படி கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x