Published : 26 Aug 2021 03:15 AM
Last Updated : 26 Aug 2021 03:15 AM

பண மோசடி வழக்கில் - தலைமறைவான இருவர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு :

பண மோசடி வழக்கில் தலைமறைவான 2 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமலதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாமக்கல்லைச் சேர்ந்த சந்தோஷ் (57) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு எஸ்ஆர்ஒய் ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து பண முதலீடு பெற்று மோசடி செய்தார். இதன்பின்னர் அவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தலைமறைவாக உள்ளார்.

இதேபோல, ராசிபுரத்தைச் சேர்ந்த அருள்மணி (60) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு மகாலட்சுமி நகர் ரியல் எஸ்டேட் வீட்டு மனை தவணை திட்டம் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து பணத்தை முதலீடாக பெற்று மோசடி செய்துள்ளார். மேலும், அவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தலைமறைவாகவுள்ளார்.

தலைமறைவாகவுள்ள சந்தோஷ் மற்றும் அருள்மணி ஆகிய இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகிறது.

இவர்கள் பற்றிய விவரம் தெரிந்தால் அல்லது அவர்களது உறவினர்கள், நண்பர்களை அவர்கள் பார்க்க வந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.

தகவலை நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டர் பிரேமலதாவிடம் தெரிவிக்க வேண்டும் அல்லது 94981 75717 என்ற செல்போன் எண் மற்றும் 04286-281372 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x