இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

சுழற்சி முறையில் உரிய கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளுடன் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைத் திறக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் அரவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் திருச்சி மோகன்குமார், திருவாரூர் ஹரி சுர்ஜித், தஞ்சாவூர் பிரபாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்டத் தலைவர்கள் திருச்சி துளசிதாசன், மயிலாடுதுறை மணிபாரதி, புதுக்கோட்டை சந்தோஷ், தஞ்சாவூர் அர்ஜூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in