குண்டர் சட்டத்தில் இருவர் கைது :

குண்டர் சட்டத்தில்  இருவர் கைது :
Updated on
1 min read

அம்பாசமுத்திரம் வட்டம், அயன்திருவாலீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் மூக்காண்டி (44). இவர் மீது அடிதடி மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. இதுபோல், வீரவநல்லூர் கொட்டாரக்குறிச்சியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகேந்திரன் (36) என்பவர் மீது கொலை வழக்கு உள்ளது. மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் பரிந்துரைப்படி, இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு உத்தரவிட்டார். மூக்காண்டி, மகேந்திரன் ஆகியோர், பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in