வைகை அணையை தூர்வார வழக்கு :

வைகை அணையை தூர்வார வழக்கு :
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் வைகை அணையிலிருந்து வரும் தண்ணீர் பல்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த மின் மோட்டார்களை வைத்து திருடப்படுகிறது. இதனால் விளைநிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, வைகை அணையை முழுமையாக தூர்வாரவும், நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தண்ணீர் திருட்டை தடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை செயலர், தேனி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை 5 வாரங்களுக்கு தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in