Published : 25 Aug 2021 03:17 AM
Last Updated : 25 Aug 2021 03:17 AM

ஈரோடு மாவட்டத்தில் 3 நாளாக மழை கொடுமுடியில் 68 மி.மீ பதிவு :

ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக காலை முதல் மதியம் வரை வெயிலும், மாலையில் மழைப்பொழிவும் இருந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

கொடுமுடி, சாலைப்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சாரல் மழை பெய்தது.

ஈரோட்டில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மி.மீ): கொடுமுடி 68, குண்டேரிப்பள்ளம் 30.6, மொடக்குறிச்சி 16, ஈரோடு 12, சென்னிமலை 9.4, பெருந்துறை 9, வரட்டுப்பள்ளம் 4.4.

பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர் மட்டம் நேற்று மாலை 101.38 அடியாக இருந்தது. அணையில் 29.82 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநாடிக்கு 628 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு 500 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றில் 100 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு சரி செய்யும் பணி நடைபெறுவதால், அப்பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x