2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் குழுவினர் பேரணாம்பட்டு வி.கோட்டா சாலையில் உள்ள ஈத்கா மைதானம் அருகே நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மாவட்ட வழங்கல் துறை பறக்கும் படை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன் தலைமையிலான குழுவினர் சந்தேகத்துக்கிடமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தினர். அப்போது வாகனத்தில் இருந்தவர்கள் தப்பியோடினர்.

இதையடுத்து, அந்த வாகனத்தை சோதனையிட்டதில் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு 40 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரேஷன் அரிசி மூட்டைகளை வேலூரில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கிடங்கிலும், கடத்தல் வாகனத்தை உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in