Published : 24 Aug 2021 03:14 AM
Last Updated : 24 Aug 2021 03:14 AM

ஈரோட்டில் 22 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி :

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 200 இடங்களில் 22 ஆயிரத்து 650 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வாக்குச்சாவடி மையங்கள் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் ஆகிய வட்டங்களில் 177 இடங்களிலும், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் 23 இடங்களிலும் நேற்று கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.

இதற்கான டோக்கன் விநியோகம் ஏற்கெனவே நடைபெற்று இருந்ததால், அதன் அடிப்படையில் பொதுமக்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 650 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x