ரயிலில் இருந்து தவறி விழுந்த பொறியாளர் உயிரிழப்பு :

ரயிலில் இருந்து தவறி விழுந்த பொறியாளர் உயிரிழப்பு :
Updated on
1 min read

திண்டுக்கல் அருகே வடமதுரை மூக்கறுபிள்ளையார் கோவில் ரயில்வே கேட் தண்டவாளப் பகுதியில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அவரது அடையாள அட்டை மூலம் இறந்தது விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை தேவி நகர் வீராசாமி மகன் கார்த்திக்(25) எனத் தெரிந்தது.

மதுரையில் கட்டுமான நிறுவ னத்தில் பொறியாளராகப் பணி புரிந்த இவர், தூத்துக்குடி- சென்னை ரயிலில் பயணம் செய்தபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீ ஸார் வழக்குப் பதிந்து விசாரிக் கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in