திருவேங்கடத்தில் பால் வியாபாரி உயிரிழப்பு :

திருவேங்கடத்தில் பால் வியாபாரி உயிரிழப்பு  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்சுப்புராஜ் (44). பால் வியாபாரியான இவர், சங்கரன்கோவில்- புளியங்குடி சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் சுப்புராஜ் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்புராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். சங்கரன்கோவில் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in