குமாரபாளையம் பகுதியில் கனமழையால் - கோம்புபள்ளம் தரைப்பாலத்தில் அடைப்பு உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை :

குமாரபாளையம் பகுதியில் கனமழையால் -  கோம்புபள்ளம் தரைப்பாலத்தில் அடைப்பு உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை :
Updated on
1 min read

தொடர் மழையால் குமாரபாளையம் கோம்புபள்ளம் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலத்தில் குப்பை தேங்கி அடைப்பு ஏற்பட்டது. இதனை நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் கொண்டு அகற்றினர்.

குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட தம்மண்ணன் சாலையில் கோம்புபள்ளம் குறுக்கேதரைமட்டப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் பாலத்தின் கீழ் பகுதியில் செடி, கொடி மற்றும் குப்பை உள்ளிட்டவை அடைத்துக் கொள்வதால் தண்ணீர் பாலத்தின் மேலே செல்லும் நிலை உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் குமாரபாளையம் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. கோம்புபள்ளம் தரைமட்ட பாலத்தின் கீழ் அடைப்பு ஏற்படும் நிலை உருவானது.

இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் மூலம் அடைப்பை அகற்றினர். இதனால்தண்ணீர் வடிந்து சென்றது. மழைக்காலங்களில் இப்பிரச்சினை தொடர்ந்து நீடிப்பதால் உயர்மட்டப் பாலம் கட்ட வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in