Published : 23 Aug 2021 03:14 AM
Last Updated : 23 Aug 2021 03:14 AM

மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ சிலைக்கு அரசு தலைமை கொறடா மாலை அணிவித்து மரியாதை :

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள மறைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ சிலைக்கு அரசு தலைமைக்கொறடா கோவி.செழியன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1989 -91,1996-2001-ல் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த மறைந்த க.சொ.கணேசனின் 16-ம் ஆண்டு நினைவு நாள் தா.பழூரில் திமுக சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மறைந்த எம்எல்ஏ க.சொ.கணேசனின் மகனும், தற்போதைய ஜெயங்கொண்டம் எம்எல்ஏவுமான க.சொ.க.கண்ணன் தலைமை வகித்தார். அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், க.சொ.கணேச னின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, அமைதி ஊர்வலமாக சென்று கடைவீதியில் உள்ள க.சொ.கணேசன் மற்றும் பெரியார், அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x