Published : 23 Aug 2021 03:14 AM
Last Updated : 23 Aug 2021 03:14 AM

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழப்பு :

பெரம்பலூர் அருகே உள்ள வடக்குமாதவி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாவு மகள் ரேவதி (24). இவருக்கும் கள்ளக் குறிச்சி மாவட்டம் செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குணசேகர னுக்கும்(27) 26.10.20-ல் திரு மணம் நடைபெற்றது.

8 மாத கர்ப்பிணியான ரேவதி கடந்த 16-ம் தேதி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை வாயில் நுரை தள்ளியநிலையில் ரேவதி உயிரிழந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

பெரம்பலூர் கோட்டாட்சியர் ச.நிறைமதியும் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x