திமுக பகுதி செயலாளர் மீது வழக்கு பதிவு :

திமுக பகுதி செயலாளர் மீது வழக்கு பதிவு :
Updated on
1 min read

திருச்சி மாநகர திமுகவின் தில்லைநகர் பகுதி செயலாள ரும், முன்னாள் கவுன்சிலருமான கண்ணன் இல்ல திருமண விழா நேற்று முன்தினம் கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடை பெற்றது.

இதற்காக அந்த சாலையின் இருபுறத்திலும் பிளக்ஸ் பேனர் கள் வைக்கப்பட்டிருந்தன. உரிய அனுமதியின்றி அவற்றை வைத்ததாக பகுதிச் செயலாளர் கண்ணன், திமுக நிர்வாகி தர்மராஜ் ஆகியோர் மீது கன்டோன்மென்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in