மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் :

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன், மகா காளியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நேற்று காலை மகா கணபதி, ஆதி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, மகா மாரியம்மன், மகா காளியம்மன், சமதகினி முனிவர், மாதாங்கி அம்மன், நல்லேந்திர சுவாமி, மதுரை வீரன், வரதராஜபெருமாள், பாப்பாத்தியம்மன், பகவதி அம்மன், கருப்பண்ண சுவாமி, மருதையன், பேச்சியம்மன், பெரியாண்டவர், எல்லையம்மன், ஏகாம்பரேஸ்வரர், செல்லியம்மன், முத்தையன், அய்யனார் மற்றும் பரிவார சுவாமிகளுக்கும், ராஜகோபுரத்துக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in