Published : 21 Aug 2021 07:02 AM
Last Updated : 21 Aug 2021 07:02 AM
ஆம்பூர்: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய் யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. ஆம்பூர், ஏ-கஸ்பா, பி-கஸ்பா, ரெட்டிதோப்பு, கம்பிக்கொல்லை, பஜார் பகுதி, வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, ஜமீன் குளிதிகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணி முதல் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வானப்பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஆம்பூரில் 18.6 மி.மீ., வடபுதுப்பட்டில் 13.4 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரை தவிர மற்ற இடங்களில் நேற்று முன்தினம் மழை பெய்யவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT