Published : 19 Aug 2021 03:12 AM
Last Updated : 19 Aug 2021 03:12 AM

சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் மோசடி; 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் :

செஞ்சி அருகே சத்தியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிரந்தர வைப்புநிதி பெயரில் போலி ரசீது வழங்கி ரூ. 4 மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் கூட்டுறவு துணைப் பதிவாளர் குருசாமி தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விசாரணை குறித்து கூட்டுறவு அலுவலர்கள் கூறியது: சங்கத்தின் செயலாளர் காதர்பாஷா மீது எழுந்த பல்வேறு புகாரின் பேரில் அவர் கீழ்மாம்பாட்டு கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் உடல் நல குறைவால் உயிரிழந்ததையடுத்து ரூ. 4 மோசடி மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இங்கு பணியாற்றிய முருகன், விஜயராஜ், பசுமலை ஆகியோரை சங்கத் தலைவர் சாந்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x