கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கை குலுக்கல் முறையில் இன்று மாணவர்கள் தேர்வு :

கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கை குலுக்கல் முறையில் இன்று மாணவர்கள் தேர்வு :
Updated on
1 min read

கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு அதிகமான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட 61 தனியார் பள்ளிகளில் இன்று குலுக்கல் நடைபெறும், என நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் சேர்க்கை வழங்க கடந்த ஜூலை 5-ம் தேதி முதல் கடந்த 13-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதைத்தொடர்ந்து மாணவர்களின் பெயர்பட்டியல் அந்தந்த பள்ளிகளில் தகவல் பலகையில் வெளியிடப்பட்டது. இதில், நுழைவு வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் எண்ணிக்கையைவிட குறைவான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் தகுதியான விண்ணப்பங்களுக்கு மட்டும் பள்ளியில் சேர்க்கை வழங்க அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு அதிகமான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட 61 பள்ளிகளில் தகுதியான விண்ணப்பங்களுக்கு இன்று (19-ம் தேதி) அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in