Published : 19 Aug 2021 03:13 AM
Last Updated : 19 Aug 2021 03:13 AM

நாம் தமிழர் நிர்வாகி கொலை வழக்கில் 8 பேரும் விடுதலை :

மதுரையைச் சேர்ந்தவர் சுபா.முத்துக்குமார். நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகியாக இருந்த இவர், புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் வசித்து வந்தார். இவர், கடந்த 2011-ல் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே பழக்கடையில் இருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி புலன் விசாரணை பிரிவுக்கு மாற்றப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

கடந்த 4 மாதங்களாக தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஆர்.குருமூர்த்தி நேற்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x