சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் :

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் :
Updated on
1 min read

சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் விருதுநகரில் நடைபெற்றது.

விருதுநகர் வட்டாரப் போக்குவரத்துத் துறை, காவல் துறை ஆகியவை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் விருதுநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் தலைமை வகித்துப் பேசினார்.

அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில், டிஎஸ்பி அருணாசலம், எரிபொருள் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி குழுமத்தின் விரிவுரையாளர் ஜெயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in