Published : 18 Aug 2021 03:14 AM
Last Updated : 18 Aug 2021 03:14 AM

பெண் தீக்குளிக்க முயற்சி :

திண்டுக்கல்

சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி திண்டுக்கல் ஆட் சியர் முகாம் அலுவலகம் முன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

திண்டுக்கல் சிதம்பரனார் தெருவை சேர்ந்த ரமேஷ்பாபு மனைவி நாகராணி. 2 குழந்தைகள் உள்ளனர்.

பூர்வீகச் சொத்தை பிரித்துத் தர ரமேஷ்பாபுவின் தந்தையும், அவரது சகோதரரும் மறுப்பதாகக் கூறி, நாகராணி நேற்று காலை மண்ணெண்ணெய் கேனுடன் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்துக்கு வந்தார்.

அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்ற முயன்றபோது அங்கு இருந்த போலீஸார் தடுத்தனர். சொத்து பிரச்சினை குறித்து திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல் லாததால், தீக்குளிக்க முயன் றதாக நாகராணி தெரிவித்தார். போலீஸார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x