சேந்தமங்கலம் அருகே ஊராட்சித் தலைவர் உண்ணாவிரதம் :

சேந்தமங்கலம் அருகே ஊராட்சித் தலைவர் உண்ணாவிரதம் :
Updated on
1 min read

சேந்தமங்கலம் அருகே உள்ள முத்துகாப்பட்டி ஊராட்சியின் தலைவராக அருள்ராஜேஷ் உள்ளார். சுதந்திர தினமான நேற்று ஊராட்சி அலுவலகம் அருகே அவர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இதுபற்றி பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து ஊராட்சித் தலைவர் போராட்டத்தை கைவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in