2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி :

2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி :
Updated on
1 min read

திருச்சி அருகே குடும்பத் தகராறில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று, தானும் தற்கொலைக்கு முயன்ற தாய், மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அருகே உள்ள போதா வூரைச் சேர்ந்தவர் முருக பாண்டி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யா(30). இத்தம்பதியின் மகள்கள் இரண்டரை வயது இனியா, 5 மாத கைக்குழந்தை கவிதா. மது அருந்தும் பழக்கம் உடைய முருகபாண்டி அடிக்கடி மது அருந்துவதுடன், வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள் ளார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள் ளது.

முருகபாண்டி, சத்யா இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட் டுள்ளது. இதில், ஆத்திரம டைந்த சத்யா, அருகிலுள்ள வயல் பகுதிக்குச் சென்று தனது 2 குழந்தைகளையும் கிணற் றுக்குள் வீசிவிட்டு, தானும் குதித்து தற்கொலைக்கு முயன் றார். இதில், இரு குழந்தைகளும் நீரில் மூழ்கிவிட்ட நிலையில், சத்யா மட்டும் நீரில் தத்தளித்தபடி உயிருக்குப் போராடிக் கொண்டி ருந்துள்ளார். இதைக்கண்ட அக் கம்பக்கத்தினர் அங்கு வந்து சத்யாவைக் காப்பாற்றினர்.

அப்போது, 2 குழந்தைகளும் நீரில் மூழ்கிவிட்டதாக சத்யா கூறியதைத் தொடர்ந்து, ஊர் மக்கள் கிணற்றுக்குள் குதித்து தேடினர். அரை மணிநேரத்துக்கு பிறகு 2 குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டனர்.

தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீஸார் அங்கு சென்று 2 குழந்தைகளின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். சத்யாவையும் மீட்டு அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in