Published : 15 Aug 2021 03:25 AM
Last Updated : 15 Aug 2021 03:25 AM

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுமா? :

விழுப்புரம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புஷ்பகாந் தன், மாநில துணைப்பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒருங் கிணைந்த பணி மூப்புப் பட்டியல் வெளியிடவேண்டும். கலந்தாய்வு முறையில் பணிமாறுதல் வழங்க வேண்டும். தகுதியுள்ள கிராம நிர்வாக அலுவலர் களுக்கு 2 ஆண்டுகளாக பதவி உயர்வுஅளிக்காமல் உள்ளதை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x