காவல்துறையினருக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு :

தென்காசி எஸ்பி கிருஷ்ணராஜ் முன்னிலையில் காவல்துறையினர் இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடைபெற்றது.
தென்காசி எஸ்பி கிருஷ்ணராஜ் முன்னிலையில் காவல்துறையினர் இடமாறுதலுக்கான கவுன்சலிங் நடைபெற்றது.
Updated on
1 min read

காவல்துறையில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்படும்போது பல காவலர்கள் அவர்களது குடும்பத்தை பிரிந்து தொலைவில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று பணிபுரியும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காண, தென்காசி மாவட்டத்தில் கலந்தாய்வு முறையில் பணியிட மாற்றம் செய்ய எஸ்பி கிருஷ்ணராஜ் நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து, தென்காசி மாவட்டம், இலத்தூரில் உள்ள பாரத் பெண்கள் கல்வியியல் கல்லூரியில் கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்பி கிருஷ்ணராஜ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர். காவல்துறையினர் தாங்கள் பணியாற்ற விரும்பும் காவல் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கலந்தாய்வு முறையில் பணியிட மாற்றம் செய்யப்படுவதால் காவல் துறையினர் மகிழ்ச்சியடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in