Published : 15 Aug 2021 03:27 AM
Last Updated : 15 Aug 2021 03:27 AM

நெல் மூட்டைகளை விற்பனை செய்ய - இ -சேவை மையங்களில் இலவச முன்பதிவு : தி.மலை ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங் களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய இ- சேவை மையங்கள் மூலமாக இலவசமாக இணையதளத்தில் முன் பதிவு செய்யலாம் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (16-ம் தேதி) முதல் 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. நெல் மூட்டை களை விற்பனை செய்யும் விவசாயிகள், tvmdpc.com என்ற இணையதள முகவரியில் முன் பதிவு செய்யும் பணி கடந்த 13-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

அதார் அட்டை, சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களை கொண்டு கூட்டுறவுத் துறை, மகளிர் திட்டம்(ஊரக வளர்ச்சித் துறை), அரசு கேபிள் டிவி மற்றும் மின் ஆளுகை துறை உள்ளிட்ட அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் இ-சேவை மையங்கள் மூலம் கட்டணம் இல்லாமல் விவசாயிகள் முன் பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x